Sunday 13 October 2019

, ,

தங்கத்தில் முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்டுகள்




பொதுவாக தங்கத்தில் முதலீடுகள் நகைகளாக அல்லது தங்க காசுகளாக தான் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தங்க நகைகளாக அல்லது தங்க காசுகளாக முதலீடு செய்யும்போது அவற்றை பாதுகாப்பது சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆனாலும் பாதுகாப்பான முறையில் அதாவது நகைகளாக அல்லது தங்க காசுகளாக முதலீடு செய்யாமல் கோல்ட் ஃபண்டு என்று சொல்லப்படுகின்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நகைகளையும் தங்கக் காசுகளையும் பாதுகாக்கும் அவசியம் இருக்காது.  அவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு பற்றிய அறிமுகம்

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் செய்யும் முதலீடு தங்க பரிமாற்ற வர்த்தக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.  அதாவது இ டி எஃப் என்று சொல்லப்படுகின்ற தங்க பரிமாற்ற வர்த்தக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. 

பொதுவாக இடிஎஃப்  முதலீடு செய்ய வேண்டுமென்றால் தனியாக டிமேட் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும்.  ஆனால் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய டிமேட் அக்கவுண்ட் தேவையில்லை. 

குறைந்த முதலீடாக மாதம் ஆயிரம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மாதம் மாதம் முதலீடு செய்யும் தொகை முதலீடு செய்யும் தேதியில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவர்கள் இந்த கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு  திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு லாபம்

பொதுவாக முதலீடு என்று எடுத்துக் கொள்ளும்போது தங்கத்தில் 10 சதவிகிதம் முதலீடு செய்வது சரியானது.   அதற்குமேல் தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.  கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மற்ற மியூச்சுவல் ஃபண்டு போல அதிக லாபம் தரக்கூடியவை அல்ல.  பொதுவாக பங்கு சந்தை இறங்கியிருக்கும் காலங்களில் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இத்திட்டங்கள் குறைந்த கால முதலீட்டிற்கு ஏற்றவை.

சிறந்த கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்

Kotak Gold Fund – Direct Plan

ஃபண்டு நிர்வாகம்: Kotak Mahindra Mutual Fund
ஆரம்பித்த தேதி: ஜனவரி 1, 2013
லாப அளவீடு: அதிகம்
ரிஸ்க் அளவீடு: சராசரி
குறைந்த முதலீட்டு தொகை: Rs.5000/-
ஒரு வருட லாபம்: 24%
மூன்று வருட லாபம்: 7%
ஐந்து வருட லாபம்: 6.55%
பரிந்துரைக்கும் முதலீட்டுக் காலம்: 3 வருடங்கள்
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

HDFC Gold Fund – Direct Plan

ஃபண்டு நிர்வாகம்: HDFC Mutual Fund
ஆரம்பித்த தேதி: ஜனவரி 1, 2013
லாப அளவீடு: சராசரி
ரிஸ்க் அளவீடு: சராசரிக்கும் கீழ்
குறைந்த முதலீட்டு தொகை: Rs.5000/-
ஒரு வருட லாபம்: 21%
மூன்று வருட லாபம்: 7%
ஐந்து வருட லாபம்: 6.14%
பரிந்துரைக்கும் முதலீட்டுக் காலம்: 3 வருடங்கள்
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

பொறுப்புத் துறப்பு: இந்த தளத்தில் வரும் கட்டுரைகள் யாவும் முதலீட்டாளர்களின் அறிமுகத்திற்கு மட்டுமே. இந்த கட்டுரைகளை படிப்பவர்களின் முதலீட்டிற்கு இந்த தளம் பொறுப்பேற்காது. படிப்பவர்கள் முதலீட்டு திட்டங்களை நன்கு ஆராய்ந்த பிறகு முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Thursday 14 February 2019

, ,

5 சிறந்த நல்ல இலாபத்துடன் வருமான வரியையும் சேமிக்க மியூச்சுவல் ஃப்ண்டுகள்


நாம் வருமான வரியை சேமிக்க முதலீடு செய்யும் திட்டங்கள் நமக்கு வரியை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட கால முதலீடில் நல்ல இலாபமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு வருமான வரியை சேமிக்கவும் நல்ல இலாபமும் தரும் திட்டங்களில் முதன்மையானது ELSS (Equity Linked Savings Scheme) என்று சொல்லக்கூடிய பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃப்ண்டுகள். 

நாம் ELSS மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்க்கு முன் அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.  சந்தைகளில் அம்மாதிரியான ELSS மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டங்கள் பல உள்ளன.   அந்த திட்டங்களில் 5 திட்டங்கள் மிகச் சிறந்த திட்டங்களாக இருக்கின்றன.  அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. Aditya Birla Sun Life Tax Relief 96 – Direct Plan

நிறுவனம்: Aditya Birla Sun Life Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.7,373/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 17%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.31.39, Dividend Plan: Rs.216.49

2. Axis Long Term Equity Fund – Direct Plan

நிறுவனம்: Axis Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.17,090/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 19%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.44.2871, Dividend Plan: Rs.34.6307

3. Mirae Asset Tax Saver Fund – Direct Plan

நிறுவனம்: Mirae Asset Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.1,315/- கோடிகள்
தொடங்கிய நாள்: 28/12/2015
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 18.45%
இலாப சதவிகிதம் (கடந்த 3 ஆண்டுகள்): 24%
NAV: Growth Plan: Rs.16.965, Dividend Plan: Rs.14.531

4. Quant Tax Plan – Direct Plan

நிறுவனம்: Mirae Quant Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.8/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.100/-
SIP முதலீடு: Rs.100 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 14%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.86.8018, Dividend Plan: Rs.11.5907

5. Tata India Tax Savings Plan – Direct Plan

நிறுவனம்: Mirae Tata Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.1,575/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
குறைந்த பட்ச SIP முதலீடு: Rs.150 (12 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 16%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 20%
NAV: Growth Plan: Rs.17.60, Dividend Plan: Rs.91.48

Sunday 10 February 2019

,

மியூச்சுவல் ஃபண்ட் ELSS ல் முதலீடு செய்து அதிக இலாபத்தை அடைந்து வரியையும் சேமிக்கலாம்


பொதுவாக சம்பளதாரர்களுக்கு வரியை சேமிப்பது ஒரு முக்கியமாக விஷயமாக இருக்கிறது.  எவ்வாறு வரி கட்டாமல் இருப்பது என்பது ஒவ்வொருவரின் தலையாயப் பிரச்சனையாக இருக்கிறது.   அதனால் பெரும்பாலும் அவசரகதியில் பிறர் சொல்லும் ஏதோ ஒரு வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்து விடுகின்றனர்.  பின்பு அவ்வாறு முதலீடு செய்த திட்டம் சரியான இலாபம் ஈட்டாமல் சேமித்த வரியை விட அதிக அளவில் நஷ்டம் அடைகின்றனர்.  அவ்வாறு நஷ்டம் அடையாமல் மேலும் வரியை கணிசமான அளவில் சேமிக்க ஒரு முக்கியமான திட்டத்தை இங்கு நாம் காணலாம்.

பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் (ELSS)

பரஸ்பர நிதி பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் அல்லது ELSS (Equity Linked Savings Scheme) என்று சொல்லப் படுகிற முதலீடு மிகவும் இலாபம் தரக்கூடியதாகவும் வரியை சேமிக்கவும் உதவுகிறது.  இந்த மூதலீட்டீற்க்கு  வருமான வரி சட்டத்தின் 80C கீழ் வருடத்திற்க்கு ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வரை  வரி விலக்கு உண்டு.

வருட வரம்பு (Lock-in Period)

இத்திட்டம் குறைந்த லாக் இன் (Lock-in) பீரிய்டு கொண்டது.  அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 3 வருடங்களுக்கு இதில் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாது.  ஆனால் இத்திட்டம் மற்ற வரி சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (PPF-15 வருடங்கள்), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC-5 வருடங்கள்) மற்றும் FD (5 வருடங்கள்) விட குறைந்த வருட வரம்பைக் கொண்டது.  இதனால் உங்களுக்கு பணம் தேவைப்படும் போது 3 வருடங்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் பணத்தை இத்திட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.




அதிக இலாபம்

ELSS திட்டத்தில் முதலீடு செய்தால் மற்ற வரி சேமிப்பு திட்டங்களை விட அதிக இலாபம் ஈட்டலாம்.  உதாரணத்திற்க்கு PPF ல் சராசரியாக வருடத்திற்க்கு 8-9% சதவிகிதம் வட்டி கிடைக்கிறது.  NSC 7-8% சதவிகிதம் மற்றும் FD ல் சராசரியாக வருடத்திற்க்கு 6-7% சதவிகிதம் வட்டி கிடைக்கிறது.  ஆனால் ELSS திட்டம் வருடத்திற்க்கு சராசரியாக 12 முதல் 15 சதவிகிதம் வருமானம் தரக்கூடியது.

உதாரணத்திற்க்கு இத்திட்டத்திங்களின் மூலமாக PPF லாக் இன் பீரிய்டு ஆன 15 வருடத்தை கணக்கில் கொண்டு வருமானத்தை கணக்கிடுவோம்.

மாதாந்திர முதலீடு – Rs.5000/-

முதலீட்டு வருடங்கள் – 15 வருடங்கள்

PPF மற்றும் NSC – 8% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.16,29,127/-

FD – 7% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.15,07,741/-

ELSS – 12% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.22,36,783/-

ELSS திட்டம் கடந்த 15 வருடங்களில் சராசரியாக வருடத்திற்க்கு 15% சதவிகித இலாபம் கொடுத்திருக்கிறது.  அதாவது மாதத்திற்க்கு Rs.5000/- சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்திருந்தால் 15 வருட முடிவில் சுமார் Rs.28,54,825/- இலாபம் கிடைத்திருக்கும்.   முதலீடு செய்த மொத்த தொகை Rs.9,00,000/-.

மற்ற திட்டங்களை விட சுமார் 75% சதவிகிதம் அதிக லாபம் பெற்றிருக்கிறது. 

ELSS ல் முதலீடு செய்து இலாபம் பெறுவது எப்படி?

பொதுவாக பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது சந்தை சார்ந்த ஏற்ற இறக்கங்கள் மூதலீட்டை பாதிக்கும்.  பொதுவாக சந்தைகளின் இறக்கங்கள் முதலீட்டார்களை பெரிதும் பாதிப்பவை.  கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.  அதனால் முதலீட்டாளர்கள் சந்தைகளில் முதலீடு செய்ய தயங்குவார்கள்.

ஆனால் SIP மூலமாக மாதந்தோறும் 3 அல்லது 4 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை.   10 அல்லது அதற்க்கு மேல் தொடர்ந்து பணத்தை எடுக்காமல் முதலீடு செய்து வந்தால் அதிக லாபம் பெறுவது உறுதி.   வருமான வரி சேமிப்பது மட்டுமல்லாமல் அதிக இலாபமும் ஈட்டலாம்.  

Thursday 23 October 2014

, , , ,

இரயில் கட்டணத்தை தவணை முறையில் (EMI) செலுத்துங்கள் IRCTC இல்

இனி அதிகமாகி வரும் இரயில் கட்டணங்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.  இரயில் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வசதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் பொருந்தும்.


இந்திய இரயில்வே பல சிறப்பு விடுமுறை கால இரயில்களை அறிமுகப் படுத்தியிருக்கிறது.  இவற்றில் பயணம் செய்வதற்க்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  இதனால் நடுத்தர மக்கள் இவற்றை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.  இந்த EMI வசதிமூலம் அது சாத்தியமாயிருக்கிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, கட்டணம் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, EMI என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதன் வழியாக கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் இந்த வசதியை பெறலாம்.  முன்பதிவிற்க்கான கட்டணம் முழுவதும் கிரெடிட் கார்டிலிருந்து கழிக்க படும்.  பின்பு அது மாதா மாதம் வங்கியிலிருந்து தவணை முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

தற்போது இந்த வசதி சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமெ உள்ளது.  மேலும் இனி வரும் நாட்களில் இவ்வசதி மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு விரிவுப்படுத்த படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Source: Trak.in Image: wikimedia.org

Thursday 16 October 2014

,

தொழிலில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் மற்றும் தடுக்கும் இரண்டு முக்கிய வழிமுறைகள்

நீங்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாளுகிறீர்கள்?  உங்களுக்கு வரவேண்டிய பணம் தாமதமாகிறதா? அல்லது உங்கள் தொழிலில் வேறு எதாவது சிக்கல்கள் இருக்கிறதா?

நீங்கள் ஏற்கனவே தொழில் நடத்துபவராயின் இந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கலாம்.  அல்லது புதிதாக தொழில் தொடங்குபவராயின் அவற்றை பற்றி கேள்விப் பட்டிருக்கலாம்.  எவ்வாறாயினும் அப்பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  அவ்வாறு இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?  தெரிந்து கொள்ளுங்கள்.

ஓன்று: நீங்கள் வணிக ஒப்பந்தங்கள் போடும் போது முன்கூட்டியே பின்வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒப்பந்தங்கள் போடுங்கள்.  ஒப்பந்தம் போடும் போது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப பேச்சுவார்த்தை நடத்துங்கள்.  இந்த ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை.  பின்னால் இவற்றால் வரும் நன்மை தீமைகளுக்கு நாம் பொறுப்பாக நேரிடும்.  ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது நன்மைகளை மட்டும் பாராமல் அனைத்து வகையான தீமைகளையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஒப்பந்தங்களை தயார் செய்யுங்கள்.


இரண்டு: பொதுவாக தொழில்களில் கடனுக்கு விற்பனை செய்வது இயல்பான ஒன்று.  ஆனால் அந்த கடனை வசூலிப்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.  விற்பனைகளுக்கான தொகையை வசூலிக்கும் முறைகளை வழிமுறைப் படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் செயல் முறைகள் உள்ளன.  இதன் மூலம் உங்கள் விற்பனைக்கான தொகையை எந்த வித சிரமுமின்றி வசூல் செய்யலாம்.  கடன்களை சரியாக கட்டவில்லை என்றால் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.  கூறிப்பிட்ட நேரத்தில் கட்ட தவறிய கடன் மீது வட்டி மற்றும் அபராத தொகை விதிக்க முடியும்.  இது பல தொழில் முனைவோர்களுக்கு தெரிவதில்லை.  இது பற்றி மேலும் அறிந்து கொள்ள அருகிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு ஆணைத்தை (MSME) தொடர்பு கொள்ளவும்.

Featured post

5 சிறந்த நல்ல இலாபத்துடன் வருமான வரியையும் சேமிக்க மியூச்சுவல் ஃப்ண்டுகள்

நாம் வருமான வரியை சேமிக்க முதலீடு செய்யும் திட்டங்கள் நமக்கு வரியை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட கால முதலீடில் நல்ல இலாபமும் தரக்கூட...